மத்திய, மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இதில் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் சில குறிப்பிட்ட பிரிவுகளில் ஆண்களுக்கு மட்டுமே இன்றளவும் பணியிடங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் (CISF) கான்ஸ்டபிள் மற்றும் டிரைவர் (தீயணைப்பு சேவை) பதவிகளில், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் பணியிடங்கள் ஒதுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா கூறுகையில், “CISF மட்டுமல்லாமல் மற்ற துணை ராணுவ அமைப்புகளின் ஆள்சேர்ப்பு பணியிடங்களிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆள்சேர்ப்பு விதிகளில் திருத்தம் செய்ய மத்திய அரசு 8 வார கால அவகாசம் கோரியுள்ளது.” என தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த பகுதிகளில் நாளை மின் தடை…, முழு விவரம் உள்ளே!!!
விரைவில் அனைத்து ஆள்சேர்ப்பு பணியிடங்களிலும் பாலின சமத்துவத்தை நிலை நாட்ட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.