நாடு முழுவதும் தற்போது கொரோனா நோய்பரவல் வேகமெடுத்து வரும் நிலையில் தற்போது வருகிற ஏப்ரல் 26ம் தேதிக்கு பின்பு ஜிப்மர் மருத்துவமனையில் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படமாட்டாது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா எதிரொலி:
இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக கண்டறியப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநிலம்/யூனியன் பிரதேசங்களில் மிக கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் அமைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகம், கேரளா, புதுவை, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று மிக கடுமையாக பரவுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் இதனை தடுக்க தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் நாளுக்கு நாள் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை எர்முகத்தில் இருந்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டின் பிரதமர் உயர்மட்ட குழுக்களுடன் ஆலோசித்து வருகிறார். இந்நிலையில் தற்போது புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை ஓர் அதிர்ச்சியான தகவலை அறிவித்துள்ளது.
மே 2க்கு பின் ஊரடங்கு இருக்காது – ஸ்டாலின் நம்பிக்கை!!
அதன்படி புதுவையில் கொரோனா நோய்பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதனை தடுக்கும் வகையில் வருகிற ஏப்ரல் 26ம் தேதி முதல் ஜிப்மர் மருத்துவமனையில் தற்காலிகமாக வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தப்படும் என்று ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் புதுவையில் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.