‘ஜெயம் படத்தில் நான் நடிக்கவில்லை’…, நடிகர் ஜெயம்ரவி ஓபன் டாக்…..,

0
'ஜெயம் படத்தில் நான் நடிக்கவில்லை'..., நடிகர் ஜெயம்ரவி ஓபன் டாக்.....,
'ஜெயம் படத்தில் நான் நடிக்கவில்லை'..., நடிகர் ஜெயம்ரவி ஓபன் டாக்.....,

கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ திரைப்பட படப்பிடிப்பின் போது நடைபெற்ற ஸ்வாரசியமான சம்பவம் குறித்து நடிகர் ஜெயம் ரவி முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் ஜெயம் ரவி. சினிமா பின்புலத்துடன் தமிழ் திரைப்பட உலகில் காலடி எடுத்து வைத்த நடிகர் ஜெயம் ரவி ஆரம்பத்தில் இருந்தே நல்ல திரைப்படங்களை கொடுத்து வருகிறார். இதனால், மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார் ஜெயம் ரவி. குறிப்பாக, இவரது நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மொழிகளை கடந்தும் பேசப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த திரைப்படத்தில், இவர் அருள்மொழிவர்மன் என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கான 2 ஆம் பாகம் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. இதற்கிடையில், நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ என்ற திரைப்படம் இன்னும் ஓரிரு தினங்களில் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிகைகள் ப்ரியா பவானி சங்கர், தான்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

‘விடுதலை 1’ திரைப்படத்தின் பிரமாண்ட இசைவெளியீட்டு விழா….,மார்ச் 8 இல் ட்ரைலர் ரிலீஸ்…,

இந்த சூழலில், ‘அகிலன்’ திரைப்படத்திற்காக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி, தனது முதல் திரைப்படமான ‘ஜெயம்’ குறித்த சில தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, ‘ஜெயம்’ திரைப்படத்தில் பாதி திரைப்படத்தில் மட்டுமே தான் நடித்ததாகவும், மீதி பாதி திரைப்படத்தில் அவருக்கு பதிலாக மாஸ்டர் மைக்கேல் டூப் போட்டதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக, சுவர் மீது சைக்கிள் ஓட்டுவது போன்ற பல காட்சிகளில் டூப் போட்டு நடித்ததாக கூறியுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here