மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.
ஜெயலலிதா பிறந்தநாள்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. இந்த விழாவில் அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் துவக்கமாக சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள, அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார்கள்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னையில் மாபெரும் புத்தகக் கண்காட்சி – துணை முதல்வர் துவக்கி வைப்பு!!
பின்னர் கட்சி அலுவலகத்திலுள்ள கட்சி கொடியை ஏற்றிய பின்பு இனிப்புகள் வழங்கப்பட்டது. முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் சேர்ந்து ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழின் சிறப்பு வெளியீடாக ‘ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா சிறப்பு மலரை’ வெளியிட்டனர். இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல அதிமுக சார்பில் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் துவங்கி வைக்கப்பட்டது.