சினிமா வில்லன் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.., உங்க மனைவிக்கே இந்த நிலைமையா.., போலீசார் விசாரணை!!

0
சினிமா வில்லன் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.., உங்க மனைவிக்கே இந்த நிலைமையா.., போலீசார் விசாரணை!!
சினிமா வில்லன் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.., உங்க மனைவிக்கே இந்த நிலைமையா.., போலீசார் விசாரணை!!

தமிழ் படங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து பிரபலமாகிய ராதாகிருஷ்ணன் (ஆர்.கே.) இப்போது சென்னை நந்தம்பாக்கத்தில் குடியிருந்து வருகிறார். கடந்த நவம்பர் 10ம் தேதி நடிகர் ஆர்.கே. பர்சனல் வேலையாக வெளியூர் சென்றிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி ராஜியை திடீரென்று மர்மகும்பல் கத்தியை காட்டி மிரட்டி பீரோவில் இருந்த 200 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையறிந்த நடிகர் ஆர்.கே. நந்தம்பாக்கம் காவல் துறையில் புகார் செய்ய விரைந்து வந்த போலீசார் வீட்டில் உள்ள CCTV காட்சிகளை கண்காணித்தனர். இதில் ஆர்.கே வீட்டில் வேலை பார்த்த வாட்ச் மேன் ரமேஷ்(நேபாளம்) தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது என தெரிய வந்தது. இதனையடுத்து விசாரித்த போலீசார் காவலாளி ரமேஷை சந்திக்க இருவர் 10 நாட்களுக்கு முன்பு வந்துள்ளதாகவும், சம்பவம் நடந்த நாளன்று காவலாளி விடுப்பில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

என் மனைவி அப்படி கிடையாது சார்.., போனில் ஆடியோ கேட்டு துடிதுடித்து போன கணவன்.., கண்ணீரில் மிதந்த காவல்துறை!!

இதனால் ரமேஷ் மற்றும் அவரின் குழுவினரை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் இப்போது ரமேஷ் மற்றும் கூட்டாளி கரண் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இருவரையும் விசாரித்ததில் 150 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்க பணம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here