உலக அளவில் புதிய உச்சம் அடைவதே இலக்கு”…, டோக்கியோ ஒலிம்பிக் சாதனையை முறியடித்த தமிழக வீரர்!!

0
உலக அளவில் புதிய உச்சம் அடைவதே இலக்கு
உலக அளவில் புதிய உச்சம் அடைவதே இலக்கு"..., டோக்கியோ ஒலிம்பிக் சாதனையை முறியடித்த தமிழக வீரர்!!

தமிழக வீரரான ஜெஸ்வின் ஆல்ட்ர், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரின் சாதனையை முறியடித்து, தேசிய அளவில் புதிய உச்சத்தை அடைந்துள்ளார்.

ஜெஸ்வின் ஆல்ட்ர்

இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தில், இந்தியன் ஓபன் (தேசிய) நீளம் தாண்டுதல் போட்டிக்கான சாம்பியன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ர் தேசிய அளவிலான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது, நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில், ஜெஸ்வின் ஆல்ட்ர் 8.42மீட்டர் நீளம் தாண்டி முதலிடத்தை தட்டி சென்றுள்ளார். இதற்கு முன், கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய பெடரேஷன் போட்டியில், முரளி ஸ்ரீசங்கர் 8.36மீ நீளம் தாண்டியதே தேசிய சாதனையாக இருந்தது. தற்போது, இந்த சாதனையை ஜெஸ்வின் ஆல்ட்ர் முறியடித்துள்ளார்.

IND vs AUS 3rd Test: 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா…, இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி!!

மேலும், சர்வதேச அளவிலான போட்டிகளில், 8.41மீ நீளம் தாண்டி கிரேக்க நாட்டை சேர்ந்த மில்டியாடிஸ் டென்டோக்லோ டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இந்த சாதனையையும் தமிழகத்தின் ஜெஸ்வின் ஆல்ட்ர் முறியடித்து புதிய உச்சத்தை அடைந்துள்ளார். இது குறித்து, ஜெஸ்வின் ஆல்ட்ர் தேசிய சாதனையை அடைவதற்கு சிறிது காலம் ஆகிவிட்டது. இந்த சாதனையை நான் பயிற்சி செய்த இடத்திலேயே அடைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது மேலும், கடினமாக உழைத்து உலக அளவில் சாதனை படைக்க விரும்புகிறேன் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here