கோலிவுட்டில் பல படங்களை இயக்கி “யாருடா டைரக்டர்” என தேடும் அளவுக்கு தரமான ஹிட்களை கொடுத்தவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் நடிகர் விஜய்யை வைத்து வேற லெவெலில் உருவாக்கிய மாஸ்டர் ஹிட் படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் “தளபதி 67” படத்தை இயக்கி வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் கைதி 2, விக்ரம் 2 என பல படங்களை கையில் வைத்து 2, 3 வருடங்களுக்கு பிஸி ஷெடுயுளுடன் உலா வருகிறார் லோகேஷ். இந்நிலையில் சமீபகாலமாக பெரிய அளவில் படங்கள் எடுக்காத ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார்.
பிக் பாஸின் அந்த கேள்வியால் கணவனை நினைத்து கலங்கிய ரக்ஷிதா.., வைரலாகும் வீடியோ ஆதாரம்!!
இப்படத்தில் சோழ நாட்டு இளவரசராக நடித்து பெரிய அளவில் மக்களின் அன்பை பெற்றார். இந்நிலையில் ஜெயம் ரவியிடம் லோகேஷ் கனகராஜுடன் இணைய வாய்ப்பு இருக்கா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு லோகேஷ் தரமான கதையை தனக்கு கூறியதாகவும், விரைவில் LCU இயக்கத்தில் JR கதைக்களம் வெளிவரும் என்றும் ஜெயம் ரவி கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது.