முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து, இன்று மீண்டும் விசாரணையை தொடங்கிய ஆறுமுகசாமி ஆணையத்திடம், அப்போலோ மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.
மேல தான் அப்படின்னு பார்த்தா.. கீழ அதுக்கும் மேல இருக்கு.. குட்டி உடையில் கண்டபடி போஸ் கொடுத்த ஷிவானி!
பரபரப்பு வாக்குமூலம் :
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த 2016ம் ஆண்டு, டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, முன்னாள் முதல்வர் பழனிசாமி, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார். இந்த ஆணையம், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இன்று விசாரணையை தொடங்கியது. இந்த ஆணையத்திடம், இன்று நேரில் ஆஜராகி விளக்கமளித்த அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் புது கருத்து ஒன்றை தெரிவித்தார்.
அதாவது, ஜெயலலிதா 2016 ல் 2வது முறையாக முதல்வராக பதவியேற்கும் போதே அவரது உடல்நிலை மோசமடைந்து விட்டதாகவும், தலைசுற்றல், மயக்கம் மற்றும் மற்றவர் துணையில்லாமல் நடப்பது உள்ளிட்ட பல உடல் உபாதைகள் இருந்து வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, தான் அவரை ஓய்வெடுக்க வற்புறுத்தியதாகவும், ஆனால் அவர் 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறி அவர் அதை மறுத்து விட்டதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்