‘என்ன பும்ராஹ் அப்ப ஒரு பேச்சு இப்ப ஒரு பேச்சா’ – ஒரு போட்டோவால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

0

கிரிக்கெட் வீரர் பும்ராஹ் ட்விட்டரில் ஒரு புகைப்படம் பதிவிட்டதற்கு நெட்டிசன்கள் அவரை வறுத்து எடுத்துள்ளனர். அவர்கள் மட்டும் தான் என்று பார்த்தால் அவர்கள் மட்டும் இல்லை ஒரு எம்.பியும் அவரை வறுத்துள்ளார். ஒரு போட்டோவ ட்வீட் பண்ணது தப்பா என்று நொந்து போய் உள்ளார் பும்ராஹ்.

கிரிக்கெட் வீரர் பும்ராஹ்

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதய சுழற்பந்து வீச்சாளராக இருந்து வருபவர் தான், ஜாஸ்பிரிட் பும்ராஹ். இவர் இந்திய அணியில் தற்போது முக்கியமான ஒரு வீரராக பார்க்கப்படுகிறார். இவரது பந்துவீச்சின் காரணமாக இவர் அனைத்து போட்டிகளிலும் முன்னிலைபடுத்தப்படுகிறார். இதனை அடுத்து இவர் தற்போது நடைபெற்று வரும் டி20 போட்டிகளில் பங்கேற்க இயலாது என்று கூறி போட்டிகளில் இருந்து விலகியிருந்தார். அதற்கான காரணமும் முன்கூட்டியே கூறப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் விளையாட்டு தொடர்களை தொகுத்து வழங்கும் சஞ்சனா கணேசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வந்தது. அனைவரும் அவருக்கும் சஞ்சனாவிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இதனை அடுத்து தற்போது பும்ராஹ் மீண்டும் ஒரு புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். காரணம், இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தீபாவளியின் போது ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் பிரபலங்கள் – இணையத்தில் ட்ரெண்டாகும் லிஸ்ட்!!

அதில் மக்கள் பட்டாசுகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து இவர் தற்போது வெளியிட்டிருந்த புகைப்படத்தில் இவர் தனது மனைவியுடன் நடந்து வருவது போல் உள்ளது. இவர்களுக்கு பின்னே அனைவரும் இருவருக்கும் மேலே மத்தாப்புகளை பிடித்து வரவேற்கின்றனர்.

இதனை பார்த்து காண்டாகிய நெட்டிசன்கள் அவரை வறுத்து தள்ளி வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஒரு எம்.பியும் பும்ராஹ்விடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here