இதோ வந்துட்டேன்லனு சொல்ற மாதிரி நேத்து மேட்ச்லையும் வந்துட்டாரு ஜார்வோ. இப்பொழுது மூன்றாம் டெஸ்ட் மேட்ச் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்துகொண்டுள்ளது. எப்படியாவது இந்தியா ஜெயித்து விட வேண்டும் என்று அனைவருமே நினைத்து கொண்டுள்ளனர். ரோஹித் சர்மா தற்போது அவுட்டாகிய நிலையில் டிஎஸ்ஆர் ரிவியூக்காக காத்திருந்தும் அம்பையர் கால்னு சொல்லிட்டாங்க. ரோஹித்துக்கு அடுத்ததாக கோலி தான் பேட்டிங் செய்வதாக இருந்தது. அப்பொழுது நான் தான் கோலி என்ற ரேஞ்சுக்கு ஒருவர் பீல்டிங்கில் களமிறங்கினார். அது வேறு யாருமில்லை ஜார்வோ தான். இவரு யாருனு எல்லாரும் யோசிச்சிட்டு இருந்தப்போ தான் தெரிஞ்சது, இரண்டாவது மேட்ச்சில் இந்தியாவிற்காக களமிறங்கியவர். அந்த மேட்ச்சில் அவர் என்ன செய்திருந்தாரோ அதே செய்தாரோ அதே தான் இந்த மேட்ச்சிலும் செய்துள்ளார். என்னோட டி-ஷர்ட் இந்தியா லோகோ, நானும் இந்தியன் பிளேயர் தான்னு எல்லார் மைண்ட்டுளையும் செட் பண்ற மாதிரி நடிப்பை போட்டாரு. அப்பவும் வாப்பா தம்பின்னு வெளியே கூட்டிட்டு போனாங்க.., ஆனா அதை அவரு கேக்கவே இல்லை. வாயால சொன்னா கேக்க மாட்டாருனு அவரை ஒரே தூக்கா தூக்கி வெளியே அனுப்பிட்டாங்க செக்யூரிட்டி போன தடவை இந்த நிகழ்வை பார்த்து சிராஜ் கைகொட்டி சிரிக்க ஆரம்பித்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த தடவை விராட்டுகே பெரிய ஷாக் கொடுத்துவிட்டார் ஜார்வோ. நீ கோலினா நான் யாருடானு ??விராட்டுக்கே பெரிய டவுட் வந்து இருக்கும். 4வது நாள் மேட்ச்ல என்ன நடக்க போகுதுனு பொறுத்திருந்து தான் பாக்கணும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்