ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக, நடமாட்டம் இல்லாமல் இருந்த நபர், கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய மறுநாளே நார்மல் மனிதனாக மாறிய சம்பவம் வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வினோத சம்பவம் :
இந்தியா முழுவதும் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால், பல்வேறு மாநிலங்களில், கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள், பொது இடங்களில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தும் பணியை மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜார்கண்ட் மாநிலத்தின் Salgadih கிராமத்தை சேர்ந்த 55 வயதான துலர்சந்த் முண்டா என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டார்.
கடந்த 5 ஆண்டுகளாக நடமாட்டம் இல்லாமல் இருந்து வந்த அவருக்கு, இந்த மாதம் 4ஆம் தேதி கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்பட்ட அடுத்த நாளே இவர் எழுந்து நிற்கவும், ஒரு சில வார்த்தைகள் பேசவும் செய்துள்ளார். இந்த வினோதத்தை உறுதிப்படுத்திய மருத்துவர் ஜிதேந்திர குமார், சம்பந்தப்பட்ட நபரிடம் இருக்கும் மருத்துவ வினோதத்தை கண்டுபிடிக்க 3 பேர் கொண்ட குழு அமைத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்