வருடந்தோறும் தை முதல் நாளன்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பித்து வருகின்றனர். இதனால் ஏழை எளிய மக்களும் பண்டிகையை கொண்டாடும் விதத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
பொங்கல் பரிசில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரொக்கம் ரூ.1000 போன்றவைகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 9ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி 13ம் தேதிக்குள் பொங்கல் பரிசு பெறாதவர்கள் ஜனவரி 15, 16ம் தேதிகளில் ரேஷன் கடைகளில் பெறலாம் என அரசு அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து தற்போது ஜனவரி 16ம் தேதி மாட்டு பொங்கல் தினத்தில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது விடுமுறை நாளான ஜனவரி 13ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதால் ஜனவரி 16ம் தேதிக்கு விடுமுறை மாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.