தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிப்பு – அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி!!

0

தமிழகத்தில் அதிகரித்து வரும் தொற்று பரவலை கருத்தில் கொண்டு வரும் ஞாயிறு (ஜனவரி, 23 2022) அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி ஊரடங்கு:

கொரோனா இரண்டாம் அலை முடிவுக்கு வந்த வேளையில் தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தற்போது உலகின் பல நாடுகளில் இந்த தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் நேற்று மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒவ்வொரு மாநில அரசால் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டது.

தமிழகத்திலும் கடந்த 2 வாரங்களாக வார இறுதி ஊரடங்கு, இரவு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வரும் ஞாயிறு கிழமையும் (ஜனவரி, 23 2022) தமிழக அரசால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here