நாடு மற்றும் நாட்டு மக்களும் பல துறைகளில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். இருப்பினும் இன்னும் ஒரு சில மாநிலங்களின் சில கிராமங்கள் மின்சார வசதிகள் கூட இல்லாமல் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். அதில் ஒரு கிராமம் தான் ஜம்மு காஷ்மீரில் உள்ள கடோலா. தற்போது அந்த கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
அறிவியல் துறையில் பல புதுமைகளை செய்து பல துறைகளில் முன்னேறி கொண்டே வருகிறது நாடு. தற்போது அனைத்தும் இணையம் மார்க்கமாக உள்ளது. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பெரும்பாலான அடிப்படை தேவைகள் இணையம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கையில் இன்னும் மின்சார பல்புகளின் ஒளி கூட இல்லாத கிராமங்கள் இருக்கத்தான் செய்கிறது.
அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரம்பன் மாவட்டத்தில் உள்ள கடோலா என்ற கிராமத்தில் இதுவரை மின்சார இணைப்பு இல்லாமல் கிராமம் இருளில் மூழ்கி இருந்து உள்ளது. இந்நிலையில் தற்போது அந்த கிராமத்திற்கு வெளிச்சம் கிடைத்து உள்ளது. அதாவது, மத்திய அரசின் சௌபாக்கியா யோஜனா திட்டத்தின் கீழ் மின்சார இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மின்சார இணைப்பு கிடைக்க பெற்றதால் அந்த கிராம மக்கள் அளவில்லாத மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்