அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஜம்மு- காஷ்மீரில் சில்லறை கடைகள் திறப்பதை எதிர்த்து அந்த மாநில வர்த்தகர்கள் கடையடைப்பு செய்து எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
எதிர்ப்பை காட்டும் வியாபாரிகள்:
ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு மாநில அந்தஸ்து அண்மையில் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதற்கு இந்த மாநிலத்தை சேர்ந்த தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அறிவித்த இந்த முடிவிலிருந்து கண்டிப்பாக பின்வாங்க போவதில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது. இதனை அடுத்து, தங்களுடைய சில்லறை விற்பனை கடைகளை இங்கு நிறுவ உள்ளதாக அதானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்தது.
இந்த செயலுக்கு எதிர்ப்பை பதிவு செய்வதற்காக மாநிலத்தில் உள்ள கடைகளை எல்லாம் அடைப்பதாக வியாபாரிகள் முடிவு செய்தனர். இதனால், இன்று மாநிலம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. இவர்களின் இந்த போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்