இசைஞானி இளையராஜா பற்றி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசியது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இசைஞானி இளையராஜா:
தமிழ் திரையுலகில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து 80ஸ் இருந்து தற்போது முன்னணி இசையமைப்பாளராக கொடிக்கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளையராஜா. இவர் மெட்டுக்கள் போடாத இடமே கிடையாது. சொல்லப்போனால் இவரின் இசைக்கு அடிமையாகாத ஆட்களும் கிடையாது. அதனாலேயே இவரை ரஜினி உட்பட பலரும் இசை கடவுள் என்று பாசத்தோடு அழைத்து வருகிறார்கள்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படி இருக்க இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவரை தரைகுறைவாக விமர்சித்துள்ள சம்பவம் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது அவர் பேசியதாவது, இளையராஜா என்னுடைய குரு. அவரின் பாடல்களை கேட்டு தான் நான் வளர்ந்தேன். ஆனால் அவர் மெச்சூரிட்டி இல்லாத மட்டமான மனிதன். பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நாகரிகம் தெரியாதவர். சொல்ல போனால் அவர் ஒரு ஏமாற்றுக்காரர்.
ஆத்தாடி.., நம்ம சம்முவா இது.., போட்டோவை பார்த்து ஹார்ட் பீட்டை எகிறவிடும் இணையவாசிகள்!!!
ஆன்மிகத்தை முன்வைத்து கெட்ட வார்த்தையில் பேசுபவர். இப்படி ஒரு மட்டமான மனிதரைப் பார்க்க முடியாது. நான் என் குருவை விமர்சிக்கவில்லை, இளையராஜா என்ற தனி மனிதரை தான் விமர்சிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் ஜேம்ஸ் வசந்தனை வெளுத்து வாங்கி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் அவர் கூறியது சரி என்று அவருக்கு சாதகமாக பேசி வருகின்றனர்.