தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில், “ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் கலாச்சாரம், இறைவழிபாடு, பாரம்பரியம். இதன் காரணமாகவே குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என எதிர் மனு தாக்கல் செய்தனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
நீண்ட காலமாக நடந்த இந்த வழக்கிற்கு இன்று தீர்ப்புகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கி உள்ளனர். “ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசின் திருத்தப்பட்ட அவசர சட்ட ஆவணங்கள் திருப்திகரமாக உள்ளது. இந்த சட்டத்திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். எனவே ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்கிறோம்.” என அதிரடியாக உத்தரவிட்டார்.
தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!
இதனை தொடர்ந்து விசாரிக்கப்பட்ட கர்நாடகாவில் கம்பலா மற்றும் மராட்டியத்தின் சக்கடி விளையாட்டுகளுக்கு எதிரான வழக்குகளையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.