ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
உச்சநீதிமன்றம் உத்தரவு:
தமிழர்களின் வீர விளையாட்டில் ஒன்று ஜல்லிக்கட்டு என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அனைத்து விதமான மாடுகள் கலந்து கொள்வது வழக்கம்.இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தார்.
அதன் அடிப்படையில் நடந்த வழக்கில் அரசு தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளைப் பங்கேற்க அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழக அரசு மேற்கொண்ட மேல் முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தற்போது இடைக்கால தடை விதித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்