நெல்சன் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நடிக்க வில்லை என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஜெயிலர்:
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர் பட்டியலில் ஒருவராக இருப்பவர் தான் இயக்குனர் நெல்சன். இவர் கடைசியாக இயக்கிய பீஸ்ட் திரைப்படம் ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை சுதாரித்த நெல்சன் அடுத்து இயக்கும் ஜெயிலர் படத்தை கவனமாகக் கையாண்டு வருகிறார்.
இருப்பினும் படத்தின் எதிர்பார்ப்புகள் ஒரு போதும் ரசிகர்களிடம் குறைந்த பாடில்லை. மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் நான் நடிக்கவில்லை என்று கூறி நடிகை பிரியங்கா மோகன் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது, அண்மையில் ஜெயிலர் படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக கோலிவுட்டில் அரசல் புரசலாக பேசப்பட்டது. இதை முற்றிலும் போலியான தகவல் என்று பிரியங்கா மோகன் மறுத்துள்ளார். ஆனால் நிஜமாகவே பிரியங்காவிடம் பேச்சு வார்த்தை பேசப்பட்டது. ஆனால் உண்மை கிடையாதாம். ஜெயிலர் படத்திற்கு ஏக எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் பிரியங்கா மோகன் படத்தில் இல்லை என்பதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.