ஜெய்பீம் படத்தை பார்த்து ராகவா லாரன்ஸ் செய்த காரியம் – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர் பட்டாளம்!!

0

சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் படத்தை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் செய்துள்ள முக்கிய செயல் ஒன்று அவரது ரசிகர்களிடையே மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.

லாரன்ஸ் செய்த காரியம்:

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் அண்மையில் ரிலீசான படம் ஜெய் பீம்.  இந்த படத்தை பார்த்த தமிழக முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இப்பட குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  இந்த நிலையில், இந்த படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ராசா கண்ணு- பார்வதியம்மாள் தம்பதியினர். இவர்களைப் பற்றிய செய்தி யூடியூப்பில் வெளியானது.  இதை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், கணவனை இழந்து தவிக்கும் பார்வதி அம்மாளுக்கு தன் சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக அறிவித்து உள்ளார்.  இந்த அறிவிப்பைக் கேட்ட அவரது ரசிகர்கள்  ராகவா லாரன்ஸுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here