நடிகர் சூர்யா நடிப்பில், உருவாகி ஓடிடியில் ரீலீஸான ஜெய்பீம் படம் சாதி மத கலவரத்தை உண்டாக்குவதாக கூறி, சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
போலீசார் வழக்குப்பதிவு:
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில், உருவாகி கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படத்தில், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சம்பந்தப்பட்ட குறியீடுகள் மோசமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் வன்னியர் சேனா அமைப்பினர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக போலீசில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து சூர்யா, ஜோதிகா மற்றும் தயாரிப்பாளர் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தினர். தொடர்ந்து, இந்த பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது, இந்த படம் சாதி மத கலவரத்தை தூண்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால், சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்