நடிகர் சூர்யா ஜோதிகா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடுப்பு – அதிதீவிர சர்ச்சையில் ஜெய்பீம் திரைப்படம்!!

0

ஜெய்பீம் படத்திற்கு எதிராக  நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா மீது வன்னியர் சங்க பிரதிநிதி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

நடிகருக்கு எதிராக வழக்கு:

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில், அண்மையில் உருவாகி ஓடிடி தளத்தில் ரிலீசான திரைப்படம் ஜெய் பீம். இருளர் இன மக்களின் வாழ்க்கையில் நடந்த அநீதிகளை எடுத்துரைக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வரவேற்ப்பை பெற்ற இந்த படம்,அதே அளவு எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.

இந்தப் படத்தில் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து இயக்குனர் ஞானவேல்ராஜா அண்மையில் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி சிதம்பரம் சார்பாக, நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here