தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் எல்லாம் வில்லன்களாக நடிப்பது லேட்டஸ்ட் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது. அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதி ‘விக்ரம் வேதா’ படத்தில் நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்து ஒரு மைல் ஸ்டோனை வைத்துப் போக, அவரைத் தொடர்ந்து பலரும் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து தங்களது வெயிட்டை காட்ட முயலுகின்றனர்.
குறிப்பாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா ரோலெக்ஸ் என்ற நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தி இருந்தார். மேலும், உலக நாயகன் கமல்ஹாசன் கூட ‘ப்ரொஜெக்ட் K’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறாராம். இப்படி வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மோகம் நடிகர் ஜெய்க்கும் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வெளியூர்களுக்கு செல்வோர் கவனத்திற்கு….,இந்த வாரம் கூடுதலாக 2,200 பேருந்துகள் இயக்கம்….,
அதாவது, கைவசம் உள்ள திரைப்படங்களில் நடித்து முடித்த பிறகு அடுத்து கமிட் ஆகும் படத்தில் வில்லன் வேடம் ஏற்று நடிக்க இருக்கும் ஆசையை தெரிவித்துள்ளார் நடிகர் ஜெய். இவர் தற்போது நடிகை நயன்தாராவுடன் இணைந்து பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.