காசு கொடுத்து ஆஸ்கார் யூடியூப் பக்கத்தில் இடம் பெற்ற ஜெய் பீம்? – நடிகர் சூர்யாவே அளித்த பதில்!!

0

ஜெய்பீம் திரைப்படத்தின் சில காட்சிகள் அண்மையில் ஆஸ்கார் யூடியூப் பக்கத்தில் இடம் பெற்று சாதனை படைத்தது. சூர்யா பணம் கொடுத்து தான் அந்த காட்சிகளை ஆஸ்கார் யூடியூப் பக்கத்தில் இடம் பெற செய்தார் என செய்தி பரவியது. இதற்கு சூர்யாவே தகுந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

ஜெய்பீம் திரைப்படம்:

சென்ற ஆண்டு ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல விருதுகளை அள்ளி குவித்த இந்த திரைப்படத்தின் சில காட்சிகள் ஆஸ்கார் யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றது. தற்போது 5000 அமெரிக்க டாலர்கள் கொடுத்து தான் சூர்யா இந்த திரைப்பட காட்சிகளை ஆஸ்கார் யூடியூப் பக்கத்தில் இடம் பெற்ற செய்தார் என வதந்தி பரவியது.

இதனை தொடர்ந்து சூர்யா இதற்கு விளக்கம் அளித்துள்ளார். ஒரு திரைப்படத்தின் காட்சிகள் ஆஸ்கார் யூடியூப் பக்கத்தில் இடம் பெற வேண்டும் என்றால் முதலில் வீடியோவை சமர்பிப்பதற்காக 5 ஆயிரம் டாலர் செலுத்த வேண்டும். அதற்கு பின் அந்த வீடியோக்களின் தரத்தை மதிப்பாய்வு செய்து ஆஸ்கார் யூடியூப் பக்கத்தில் வெளியிட தகுதியானால் மட்டுமே அந்த காட்சிகளை ஆஸ்கார் யூடியூப் பக்கத்தில் வெளியிடுவர். 5000 டாலர்கள் பணம் கட்டி சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வீடியோக்களும் அதில் இடம்பெறாது என கூறி விளக்கம் அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here