நடிகர் சூர்யா மீது நடவடிக்கை? ஜெய் பீம் பட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

0

ஜெய் பீம் படத்தில் வன்னிய சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இன்று விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

வழக்கு ஒத்திவைப்பு:

கடந்த 2021ம் ஆண்டு இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த படம் ஜெய் பீம். இந்த படம் மக்கள் படும் இன்னல்களை மையமாக கொண்ட ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் குறிப்பிட்ட சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் அவர்களை இழிவு படுத்தியதாக இயக்குநர் ஞானவேல் மற்றும் சூர்யா உள்ளிட்டோர் மீது ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் என்பவர் டிசம்பர் 8ம் தேதி வேளச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை மறுத்து நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்நிலையில் புகார்தாரர் தரப்பில் வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த இடையீட்டு மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறினார். இன்று ஜூலை 18 இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி – அவரே வெளியிட்ட வீடியோ!!

நடந்து முடிந்த விசாரணையில் இந்த வழக்கை வருகிற ஜூலை 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here