ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில், CSK அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா தங்களது ரசிகர்களுக்கு சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ஜடேஜா:
இரண்டு வருடங்களுக்கு பிறகு, ஐபிஎல் தொடர் இந்தியாவில் முழுமையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், அவர்களது பிடித்த அணிகள், சொந்த மைதானத்தில் விளையாடுவதை காண ஆவலுடன் உள்ளனர். மேலும், இந்த ஐபிஎல் தொடரின் 16 வது சீசனை நேரில் கண்டுகளிக்கவும் தயாராகி வருகின்றன.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இன்று குஜராத்தில் தொடங்க உள்ள இந்த ஐபிஎல் தொடரில், தோனி தலைமையிலான CSK அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து மோத உள்ளது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக, CSK அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, ரசிகர்களுக்கு செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
TNPSC Group 4 தேர்வில் வந்த புதிய சர்ச்சை.., முற்றுப்புள்ளி வைத்த நிறுவனர்!!
அவர் பகிர்ந்ததாவது, கோவிட் 19க்கு பிறகு, இந்தியாவில் தொடங்கும் முதல் ஐபிஎல் தொடர் இது. ஸ்டேடியம் நிறைந்த ரசிகர்கள் மத்தியில் விளையாட ஆவலுடன் உள்ளோம். அகமதாபாத்தில் உள்ள குஜராத்தி CSK ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து எங்களுக்கு ஆதரவு தருமாறு கூறியதுடன் விசில் போடு எனவும் தெரிவித்துள்ளார். மேலும், சமீபத்தில், இந்த மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் தொடரை விளையாடிய போது, ரசிகர்களின் பெரும் ஆதரவை உணர்ந்தோம் என்று கூறியுள்ளார்.
View this post on Instagram