IND vs AUS: “பந்து வீச்சில் எனது விருப்பம் இதுதான்.., ஆனா எல்லாம் மாறிடுச்சு”…, ஜடேஜா ஓபன் டாக்!!

0

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஆட்ட நாயகனாக திகழ்ந்த ஜடேஜா, பவுலிங்கில் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

ஜடேஜா:

இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2வது ஒருநாள் போட்டியை இன்று ஆந்திர பிரதேசத்தில் உள்ள கடப்பாவில் விளையாட உள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின், முதல் போட்டியை வென்றதால், இந்திய அணி தொடரை கைப்பற்ற முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில், இந்தியாவின் ஆல் ரவுண்டரான ஜடேஜா, 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், இந்திய அணியின் வெற்றிக்கு 45* ரன்கள் எடுத்ததன் மூலம், ஆட்ட நாயகனாக தேர்வு செய்பட்டிருந்தார். சுழற்பந்து வீச்சாளரான இவர், பேட்டி ஒன்றில், எனக்கு பேட்ஸ்மேன்களுக்கு வேகப்பந்து (பவுன்ஸ்கள்) வீசுவதில் தான் அதிக விருப்பம் என்று கூறியுள்ளார்.

அசத்தலான கோல் அடித்த ரொனால்டோ…, 2வது இடத்தை எட்டிய அல் நாஸ்ர் அணி!!

மேலும், இவர் கூறியதாவது, கிரிக்கெட் விளையாட தொடங்கிய போது மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை பார்த்த நான், வேகப்பந்து வீச்சாளராக தான் மாற விரும்பினேன் என்று தெரிவித்துள்ளார். கடந்த போட்டியில் போல, இன்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது போட்டிலும் ஜடேஜா சிம்ம சொப்பனமாக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here