ஜாக்டோ ஜியோ திடீர் போராட்டம்.,10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரிக்கை! அரசுக்கு நெருக்கடி!!

0
ஜாக்டோ ஜியோ திடீர் போராட்டம்.,10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரிக்கை! அரசுக்கு நெருக்கடி!!
ஜாக்டோ ஜியோ திடீர் போராட்டம்.,10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரிக்கை! அரசுக்கு நெருக்கடி!!

மாநிலம் முழுவதும், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வருகிற மார்ச் 24 ஆம் தேதி 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

திடீர் போராட்டம்:

அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ ஜியோ, கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைவது, சாலை பணியாளர்களின் 41 மாத கால பணிநீக்க காலத்தை உடனே பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இது போக, அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்புவது மற்றும் பங்களிப்பு பென்ஷனை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவது சார்ந்த 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் சர்ச்சை எதிரொலி., ஆட்சியர் தலைமையில் தனிக்குழு! வெளியான அறிவிப்பு!!

இதை, வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, மார்ச் 24ல், மனித சங்கிலி போராட்டத்தை நடத்த உள்ளதாக ஜாக்டோ ஜியோ மாநில தலைவர் அறிவித்துள்ளார். இதனால், இது சார்ந்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here