விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது நாயகியாக வலம் வருபவர் தான் ஜாக்குலின். இவர் தற்போது தன் வாழ்க்கை குறித்த முக்கியமான விஷயம் ஒன்றை கூறியுள்ளார். இந்த செய்தி வைரலாகி வருகிறது.
ஜாக்குலின்
விஜய் டிவியில் வெளியான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஜாக்குலின். இவரது கரகரப்பான குரலுக்கு தான் அதிக வரவேற்பு இருந்து வந்தது. ஷூட்டிங் செட்டில் எந்த அளவிற்கு கிண்டல் செய்தாலும் அதனை பொருட்படுத்தாமல் இருந்தவர் தான் ஜாக்குலின்.
மேலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அதாவது காமெடி நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஜாக்குலின் இல்லாமல் நடந்ததில்லை. மேலும் அதன் பிறகு அவருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு தான் தேன்மொழி இந்த சீரியலில் நாயகியாக உருவெடுத்தார்.
இத்தனை நாட்கள் அவர் பொறுமை காத்ததற்கு கிடைத்த பரிசு தான் இந்த ஹீரோயின் வாய்ப்பு. ஜாக்குலினுக்கு இவ்வளவு திறமைகள் உள்ளதா?? என்று அந்த சீரியலை பார்த்த பிறகு தான் தெரிந்தது. மேலும் ஆரம்பத்தில் சுட்டி பெண்ணாக நடித்து தற்போது தன் கணவரே தனக்கு துரோகம் நினைத்து விட்டாரே என்று விரக்தியில் அவரை வெறுத்து வருகிறார்.
இந்நிலையில் ஜாக்குலினிடம் நீங்கள் நடிகையாகவோ, தொகுப்பாளினியாகவோ இல்லாமல் இருந்து இருந்தால் என்னவாக ஆகி இருப்பீர்கள் என்று கேட்க அவர் கண்டிப்பாக ஏர் ஹோஸ்டர்ஸ்ஸாக இருந்து இருப்பாராம். அல்லது குக்காக இருந்து இருப்பாராம். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்