தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறித்த வழக்கு – காவல் துறையிடம் சிக்கிய முன்னணி நடிகை!

0
தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறித்த வழக்கு - காவல் துறையிடம் சிக்கிய முன்னணி நடிகை!

தொழிலதிபரின் மனைவியை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கடந்த ஆண்டு சுகேஷ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸையும் குற்றவாளியாக சேர்த்துள்ளனர் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள்.

நடிகை ஜாக்குலின்:

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தினசரி கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் டெல்லியை சேர்ந்த தொழிலதிபரின் மனைவியை மிரட்டி கிட்டத்தட்ட ரூ.215 கோடி பணம் பறித்து மோசடி செய்துள்ளார். இதனால் கடந்த ஆண்டு சுகேஷ் சந்திரசேகரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் விசாரித்த போது மோசடி செய்த பணங்களை குறித்த சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மோசடி செய்த வழக்கில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்த பணங்களை எல்லாம் மதுக்கும் மாதுக்கும் செலவழித்துள்ளார். மேலும் இவருடன் பல பாலிவுட் நடிகைகள் தொடர்பில் இருந்துள்ளனர். அதில் குறிப்பாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார். மேலும் ஜாக்குலினுக்கு பல விதமான பரிசுகளை சுகேஷ் கொடுத்திருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுகேஷிடம் இருந்து பெற்ற பரிசுகள் குறித்த விவரங்களை தெரிவித்திருந்தார் ஜாக்குலின். தற்போது இந்த வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மோசடி செய்யப்பட்ட பணத்தை சுகேஷ்வுடன் சேர்ந்து அனுபவித்ததால் இந்த தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here