பீஸ்ட் க்கு பிறகு நெல்சனுக்கு கிடைச்ச முதல் சர்ப்ரைஸ்.., அதுவும் அந்த நடிகரிடம் இருந்தா?.., சூப்பர்ல!!

0
பீஸ்ட் க்கு பிறகு நெல்சனுக்கு கிடைச்ச முதல் சர்ப்ரைஸ்.., அதுவும் அந்த நடிகரிடம் இருந்தா?.., சூப்பர்ல!!
பீஸ்ட் க்கு பிறகு நெல்சனுக்கு கிடைச்ச முதல் சர்ப்ரைஸ்.., அதுவும் அந்த நடிகரிடம் இருந்தா?.., சூப்பர்ல!!

இயக்குனர் நெல்சன் ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை எடுத்து வரும் நிலையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பிரபல நடிகருக்கு நன்றி ஒன்றை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நெல்சன்

தற்போதைய சினிமாவில் பல இளம் இயக்குனர்கள் காலடி எடுத்து வைத்து வெற்றிவாகை சூடி வருகின்றனர். அதில் ஒருவராக விளங்குபவர் தான் இயக்குனர் நெல்சன். இவர் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பெயரெடுத்து தந்தது. ஆனால் விஜய்யை வைத்து எடுத்த பீஸ்ட் திரைப்படம் மட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் படுதோல்வி அடைந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது சூப்பர் ஸ்டாரை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ரஜினி கதாபாத்திரம் intro வீடியோ வெளியாகி வைரலானது. அதுமட்டுமின்றி இப்படத்தில் 5 மொழி நடிகர்கள் நடித்து வருகின்றனர். ஏதோ பெரிய சம்பவத்தை நெல்சன் செய்ய போகிறார் என்று ரசிகர்கள் படத்தின் ரிலீசுக்காக எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிக் பாஸ் நடிகையிடம் அத்துமீறிய பிரபல கட்சி பொதுச் செயலாளரின் உதவியாளர்! போலீஸ் வழக்கு பதிவு!!

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பிரபல நடிகருக்கு நன்றி ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடித்து பிரபல நடிகரான ஜாக்கி ஷெராப் நெல்சனுக்கு ஒரு ஸ்கூட்டியை பரிசளித்துள்ளார். அவருக்கு நன்றி கூறும் விதமாக நெல்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here