ITF டென்னிஸ்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியாவின் அங்கிதா ரெய்னா!!

0
ITF டென்னிஸ்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியாவின் அங்கிதா ரெய்னா!!
ITF டென்னிஸ்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியாவின் அங்கிதா ரெய்னா!!

பெங்களூரில் நடைபெற்று வரும் ITF டென்னிஸ் தொடரில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா சக நாட்டு வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ITF டென்னிஸ்

பெண்களுக்கான ITF டென்னிஸ் தொடர் இந்தியாவில் உள்ள பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியா சார்பாக அங்கிதா ரெய்னா, வன்ஷிதா பதானியா, ஜீல் தேசாய், ருடுஜா உள்ளிட்ட வீராங்கனைகள் பங்கு பெற்று உள்ளனர். இதில், வன்ஷிதா பதானியா மற்றும் ஜீல் தேசாய் அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேற தவறினர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால், காலிறுதி வரை முன்னேறிய இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான அங்கிதா ரெய்னா, போஸ்னியா வீராங்கனையை 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இவரை போலவே, இந்தியாவின் ருடுஜா பிரிட்டன் வீராங்கனையை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார்.

டெஸ்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள ரிஷப் பண்ட்…, வெளியான புள்ளிப் பட்டியல்!!

இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில், இந்தியாவின் அங்கிதா ரெய்னா, சக நாட்டவரான ருடுஜாவை எதிர்த்து போட்டியிட்டார். இதில், ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய அங்கிதா ரெய்னா 6-1, 6-1 என தொடர்ந்து 2 செட்களை கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். நாளை நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில், அங்கிதா ரெய்னா செக் வீராங்கனையான லிண்டா ஃப்ருஹ்விர்டோவா எதிர் கொள்ள உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here