ஐடி ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக ஊதிய உயர்வு, போனஸ் மற்றும் விடுமுறை குறித்த அறிவிப்புகளை தங்கள் பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்கியுள்ளது.
ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்:
உலகம் முழுவதும் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச் சி எல் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் பல்வேறு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா ஊரடங்குக்கு பின், கொஞ்சம் கொஞ்சமாக அலுவலகம் சென்று வேலை பார்த்து வரும் ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தனியார் நிறுவனங்கள் ஏராளமான அறிவிப்புகளை அள்ளி வீசி வருகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதன்படி இன்போசிஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு, சம்பள உயர்வு கொடுத்து புதிய ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும், டிசிஎஸ் நிறுவனம் 5% முதல் 8% வரை தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க உள்ளது.
அதேபோல், சிறந்த ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கவும் முடிவெடுத்துள்ளது. இதுபோக, பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ், விடுமுறை எடுப்பதற்கான முக்கிய விதிகளையும் அறிவித்துள்ளது.