முன்னணி நடிகரின் மகளாக இருப்பதால் நிறைய கஷ்டங்கள் அனுபவிக்கனும் – மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது முன்னணி நடிகரின் மகளாக இருப்பதால் அனுபவிக்கும் கஷ்டங்கள் பற்றி கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:

இந்திய தமிழ் சினிமாவில் எல்லா வித கதைக்களம் படத்தில் வசூல் சாதனை படைத்து வசூல் மன்னனாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் முதலில் வில்லனாக அறிமுகமாகி தற்போது வரை ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் நடிகர் ரஜினி நடிப்பு துறைக்கு வந்து கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகியுள்ளது.

இந்த 40 வருடங்களில் பாட்ஷா, படையப்பா, முத்து போன்ற பல படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தது. இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருது முதல் மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது வரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். அதில் மூத்த மகள் நடிகர் தனுஷை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சில கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு ஈவண்ட்-ல் கலந்து கொண்ட ஐஸ்வர்யாவிடம் பிரபல நடிகரின் மகளாக இருக்கும் போது அனுபவிக்கும் கஷ்டங்களை குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியதாவது, “வெளியில் இருப்பவர்களை விட நட்சத்திர குழந்தைகள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். ஏனெனில் மக்கள் எப்போதும் அவர்கள் மீது தங்களின் கண்கள் வைத்திருப்பார்கள்.மேலும் திரைப்பட தொழிலில் நுழைந்தவுடன் அவர்கள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என எதிர்பார்கிறார்கள்” என மனதில் இருந்ததை தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here