தற்போது 7வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று தனது 3வது வெற்றிக்காக கோவா மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.
ஐஎஸ்எல் கால்பந்து:
தற்போது கோவாவில் 7வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் போட்டிகளுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதேபோல் கால்பந்து போட்டிக்கும் ரசிகர்கள் உள்ளார்கள். தற்போது ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் லீக் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த 37 ஆவது லீக் போட்டியில் ஒடிசா மற்றும் கவுகாத்தி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 1 கோல்கள் அடித்தனர். அதன் பின்பு நடந்த இரண்டாவது சுற்றிலும் இரு அணிகளும் தலா ஒரு கோல்கள் அடித்தனர். அதாவது 65வது நிமிடத்தில் கவுக்கதியும் 67வது நிமிடத்தில் கோவாவும் ஒரு கோல் அடித்தனர். முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.
இன்று இரவு 7.30 மணிக்கு ஜாம்ஷெட்பூர் எப்சி மற்றும் எப்சி கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதுவரை ஜாம்ஷெட்பூர் விளையாடிய 7 போட்டிகளில் 2ல் வெற்றி, 4 டிரா மற்றும் ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில உள்ளது. அதே போல் கோவா அணி தான் விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றி, 2 டிரா மற்றும் 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.
3வது டெஸ்டில் விளையாட வாய்ப்பு – இந்திய அணியுடன் இணையும் ஹிட்மேன்!!
மேலும் இதுவரை இரு அணிகளும் 6 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. அதில் 3ல் கோவாவும், 2ல் ஜாம்ஷெட்பூர் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. மேலும் இரு அணிகளும் தங்களது 3வது வெற்றிக்காக போராடுவதால் இது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டுகளிப்பர்..