இந்தியன் சூப்பர் லீக் தொடரில், மும்பை சிட்டி அணி, ஜாம்ஷெட்பூர் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தி உள்ளது.
இந்தியன் சூப்பர் லீக்:
இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 9 வது சீசன் மும்பை, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களை மையமாக கொண்டு நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இதுவரை தோல்வியை சந்திக்காத மும்பை அணி, நேற்று ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த ஆட்டத்தின் முதல் பாதி வரையில், இரு அணிகளும் ஒரு கோல் கூட போடாமல் இருந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால், 2வது பாதியின் ஆரம்பத்தில் வேகம் காட்ட தொடங்கிய ஜாம்ஷெட்பூர் 63 வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மும்பை சிட்டி அணி லல்லியன்சுவாலா சாங்டே மற்றும் விக்ரம் சிங் 80 மற்றும் 86 வது நிமிடத்தில் 2 கோல்கள் அடித்தனர். இதே நிலையை கடைசி வரை தொடர்ந்தால், மும்பை சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் மூலம், தோல்வியை சந்திக்காத அணி என்ற பெயரை மும்பை சிட்டி அணி தக்கவைத்து கொண்டது. மேலும், மும்பை சிட்டி அணி 11 அணிகள் கொண்ட புள்ளிப் பட்டியலில் 42 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தையும் தக்க வைத்துக் கொண்டது.