இந்தியன் சூப்பர் லீக் தொடரில், பெங்களூரு அணியானது 3 கோல் வித்தியாசத்தில் ஜாம்ஷெட்பூர் அணியை அபாரமாக வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக்:
இந்தியன் சூப்பர் லீக் தொடரானது 11 அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், நேற்று ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்த்து, பெங்களூரு அணி மோதியது. இதில், தனது சொந்த மண்ணில் விளையாடிய ஜாம்ஷெட்பூர் ஆரம்ப முதலே, எதிரணியின் தாக்குதலை தடுத்து மட்டுமே வந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனாலும், பெங்களூரு அணியின் ரோஹித் குமார் மற்றும் ராய் கிருஷ்ணா 7 வது மற்றும் 34 வது இடத்தில் இரு கோல்கள் அடித்து அசத்தினர். இதனால், பெங்களூரு அணியானது ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியின் தொடக்கத்திலேயே பெங்களூரு அணியின் சிவசக்தி நாராயணன் கோல் ஒன்றை அடித்தார்.
இவர் மேல Unconditional Love இருக்கு., இனிமே இவர் தான் எல்லாம்! பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!!
இந்த போட்டியில் கடைசி வரை ஜாம்ஷெட்பூர் அணி ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது. இதில், பெங்களூரு அணி வெற்றி பெற்றதன் மூலம், 19 புள்ளிகளுடன், 11 அணிகள் உள்ள பட்டியலில் 7 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில், மும்பை சிட்டி அணியானது 36 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.