இந்தியன் சூப்பர் லீக் தொடரில், பலம் வாய்ந்த ஏடிகே மோகன் பகான் அணியை பெங்களூரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக்:
இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 9 வது சீசன் நாக் அவுட் சுற்றை எதிர்நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 11 அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த சுற்றில், நேற்று கொல்கத்தாவின் ஏடிகே மோகன் பகான் அணியானது, பெங்களூரு அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், முதல் பாதி வரையிலும் இரு அணி வீரர்களும் ஒரு கோல் கூட அடிக்காமல் தடுமாறினர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆட்டத்தின் 2வது பாதியில் வேகம் காட்ட தொடங்கிய பெங்களூரு அணியின், ஜாவி ஹெர்னாண்டஸ் 78வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்தார். இதன் முதல் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து, 90+1 வது நிமிடத்திலும், பெங்களூரு அணியின் ராய் கிருஷ்ணா மேலும் ஒரு கோல் அடித்தார்.
இதையடுத்து, ஆட்டத்தின் ஸ்டாப் ஸ்டேஜ் நேரத்தில் (90+3) ஏடிகே மோகன் பகான் அணியின், டிமிட்ரி பெட்ராடோஸ் ஒரு கோல் அடித்து அணிக்கு ஆறுதல் அளித்தார். இதன் மூலம், ஆட்ட நேர முடிவில், பெங்களூரு அணி 2-1 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியால், ஏடிகே மோகன் பகான் அணி 27 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும், 25 புள்ளிகளுடன் பெங்களூரு அணி 6 வது இடத்திலும் உள்ளன.