‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’….,இளையராஜாவின் பார்த்டே கிளிக்ஸ்….,

0
'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்'....,இளையராஜாவின் பார்த்டே கிளிக்ஸ்....,
'தம்பி உடையான் படைக்கு அஞ்சான்'....,இளையராஜாவின் பார்த்டே கிளிக்ஸ்....,

தமிழ் சினிமாவின் மாஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் இசைஞானி இளையராஜா இன்று தனது 80 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கடந்த 1976 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா குறுகிய நாட்களில் தென் இந்திய சினிமாவையே தனது இசையால் ஆக்கிரமிக்கத் துவங்கினார்.

அந்த வகையில் இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 1000 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவை ரசிகர்கள் கொண்டாடாத நாள் இல்லை. அந்த அளவுக்கு காலத்திற்கு ஏற்றபடி இவரது இசைப்பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்க, இசைஞானி இளையராஜா இன்று தனது 80 ஆவது பிறந்தநாளை தம்பி கங்கை அமரன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.

வெளியூர்களுக்கு செல்வோர் கவனத்திற்கு….,இந்த வாரம் கூடுதலாக 2,200 பேருந்துகள் இயக்கம்….,

இந்த கொண்டாட்டத்தில் கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. இது தவிர, இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது நடைபெற்று வரும் இசை நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here