இந்தியாவின் ஏபி டிவில்லியர்ஸ், 360 டிகிரி நாயகன் என பல பெயர்களில், சூர்யகுமார் யாதவ் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இதற்கு காரணம், கடந்த ஆண்டு நடைபெற்ற அனைத்து டி20 போட்டிகளிலும் சிறப்பாக செய்யப்பட்டு எதிரணியின் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்க விட்டது தான். இதனால் தான் இவர், இன்றளவும் ஐசிசி டி20 பேட்ஸ்மேனின் நம்பர் 1 வீரராக திகழ்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த வருடத்தில் இலங்கைக்கு எதிராக விளையாடிய முதல் போட்டி இவருக்கு சிறப்பாக அமைய வில்லை. ஆனால், 2வது போட்டியில் இவர், 36 பந்தில் தலா 3 பவுண்டரி, சிக்ஸர் என 51 ரன்களை எடுத்திருந்தார். இலங்கைக்கு எதிரான இந்த போட்டியில், இவரும் அக்சர் படேலும் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த போதும் இந்திய அணி இலக்கை அடையாமல் தோல்வி அடைந்தது.
குடும்பத்துடன் ஓய்வை கழிக்கும் விராட் கோலி…, இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் சூர்யகுமாரை ஏபி டிவில்லியர்ஸுடன் ஒப்பிட கூடாது என்று கூறியுள்ளார். மேலும், தொடர்ந்து பந்துகளை அடித்து ஆடுவதை குறித்து பார்த்தால், ஏபி டிவில்லியர்ஸை விட சூர்யகுமாரின் ஆற்றல் குறைவு தான். இந்த ஒரு விஷயத்தில் ஏபி டி வில்லியர்ஸை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது. இதே போல, மிடில் ஓவரில் சூர்யகுமார் போன்ற இந்திய வீரரை யாரும் காண முடியாது என்று கூறியுள்ளார்.