இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில், உருவாகியுள்ள இரவின் நிழல் படத்தில் பேசிய நடிகை பிரிகிடா தெரிவித்த கருத்துக்கள் சேரி வாசிகளிடம் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
கிளம்பிய எதிர்ப்பு:
தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குனர் என ஜொலிப்பவர் பார்த்திபன். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம், தேசிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தைத் தொடர்ந்து, ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இரவின் நிழல் என்ற நான் லீனியர் படத்தை அண்மையில் இயக்கினார். இந்த படம் திரையில் வெளியாகி, பலரது விமர்சனங்களை பெற்றுள்ளது. இதுபோக இந்த படத்தில் சிலக்கமா என்ற பாத்திரத்தில் நடித்த நடிகை பிரிகிடா பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதாவது, சேரி மக்கள் பேசும் கெட்ட வார்த்தைகளை தான் அப்படியே நாங்கள் படமாக காண்பித்து இருக்கிறோம். நாங்கள் எதையும் மாற்ற வில்லை என அண்மையில் பேசினார். இதைக் கேட்ட ஒரு பகுதி மக்கள், அப்போது இருக்கும் சேரி மக்களின் வாழ்க்கை இப்போது , இருப்பவரோடு ஒப்பிடக்கூடாது.
இப்போது இருக்கும் மக்கள் எவ்வளவோ முன்னேறி விட்டார்கள் எனக்கூறி நடிகையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைக் கேட்ட நடிகை, என் கருத்து யாரையும் காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என பார்த்திபன் சார்பாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இந்த செய்திகள் இணையத்தில் வெளியாகி, கோலிவுட் திரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்