அமெரிக்கா ராணுவ படை மீது ஆளில்லா விமானம் மூலம் ஈரான் பயங்கரவாத அமைப்புகள் தாக்குதலை நடத்தி வருவதால். அதற்கு முன்னெச்சரிக்கையாக ஈரான் மற்றும் சிரியாவில் வான்வழி தாக்குதலை நடத்தியதாக அமெரிக்காவின் ராணுவ மையமான பென்டகன் தெரிவித்துள்ளது
அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல்…
ஈராக்கில் இருக்கும் அமெரிக்க ராணுவ படைகள் மீது ஈரான் பயங்கரவாத அமைப்புகள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் உத்தரவின்படி
முன்னெச்சரிக்கையாக சிரியாவில் இரண்டு இடத்திலும் ஈராக்கில் ஒரு இடத்திலும் உள்ள பயங்கரவாத மையங்களும் மற்றும் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள இடத்திலும் வான்வழி தாக்குதலை நடத்தப்பட்டதாக அமெரிக்காவின் ராணுவ மையமான பென்டகன் அறிவித்துள்ளது . அமெரிக்கா ஈரான் தாக்குதலில் படுகாயம் மற்றும் உயிரிழந்தோரின் விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்பதால் தகவல் எதுவும் அறிவிக்கவில்லை. இந்த ஆண்டில் இது அமெரிக்கா ஈரான் பயங்கரவாத அமைப்புகள் மீது நடத்தும் 2 வது தாக்குதலாகும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்