IPL 2022 – பிரம்மாண்டமாக தொடங்க இருக்கும் 15 வது சீசன் மெகா ஏலம்!! தேதியை வெளியிட்ட பிசிசிஐ!!

0

இந்த வருட ஐபிஎல் போட்டிகளின் ஏலம் மற்றும் போட்டி தொடங்கும் தேதிகள் பற்றிய முக்கிய அறிவிப்புகளை பிசிசிஐ செயலாளர் ஜெய்  ஷா தெரிவித்துள்ளார்.

 தேதி அறிவிப்பு :

இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளில், லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரு புது அணிகளோடு சேர்த்து, 10 அணிகள் களம் இறக்கப்பட்டு உள்ளன. இதன்படி, இந்த போட்டி வீரர்களுக்கான மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெறலாம் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.  மேலும், ஏலத்துக்கு முன்பாக அகமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்ட்யா, ரஷித்கான், சுப்மான் கில் ஆகியோரையும், லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுல், ஸ்டோனிஸ் ரவி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய 6 பேரையும் பிரித்து அணிக்கு மூவர் வீதம் இரு அணிகளும் பிரித்து  கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று, ஆலோசனைக் கூட்டத்தை முடித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய் ஷா, இந்த 15 வது மெகா சீசனுக்கான ஏலம் மற்றும் போட்டி நடைபெறும் தேதிகள் பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்படி பிப்ரவரி மாதம், 12 மற்றும் 13 தேதிகளில் மெகா ஏலம் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இது போக, மார்ச் இறுதியில் அதாவது, மார்ச் 27ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்.பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா-வின் இந்த முக்கிய அறிவிப்பை அடுத்து, ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here