CSK வின் முக்கிய வீரரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய RCB அணி – ஐபிஎல் ஏலத்தில் நடந்த சுவாரஸ்யம்!!

0
CSK வின் முக்கிய வீரரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய RCB அணி - ஐபிஎல் ஏலத்தில் நடந்த சுவாரஸ்யம்!!
CSK வின் முக்கிய வீரரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய RCB அணி - ஐபிஎல் ஏலத்தில் நடந்த சுவாரஸ்யம்!!

ஐபிஎல் மெகா ஏலத்தின் போது, CSK அணியின் முக்கிய வீரரான டு பிளெஸ்ஸியை RCB அணி ஏலம் எடுத்ததால்,  CSK அணி ஒரு அருமையான பேட்டிங் மேனை தேர்வு செய்ய தவறிவிட்டதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஐபிஎல் மெகா ஏலம் :

15-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை ஐபிஎல் போட்டிகளில், 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்தன.  ஆனால், இந்த ஆண்டு புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட இரு அணிகள் களமிறக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்தின் போது, CSK அணியின் முக்கிய வீரராக இருந்த டு பிளெஸ்ஸி க்கு ஆரம்பத்தில் இருந்தே கடுமையான டிமாண்ட் இருந்து வந்தது.

கடந்த 2021ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது, CSK அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த டு பிளெஸ்ஸியை  தற்போது, பலத்த போட்டிகளுக்கு நடுவே  RCB அணி 7 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. RCB அணியில், இந்த வருடம் டிவில்லியர்ஸ் இல்லாத குறையை டு பிளெஸ்ஸி சரி செய்து விடுவார் என அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here