இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் அக்டோபர், நவம்பர் மாதத்தில் நடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய உயர்மட்ட உறுப்பினர் தகவல் தெரிவித்து உள்ளார்.
ஐபிஎல் போட்டிகள்:
இந்தியாவில் மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகளின் 13வது சீசன் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மேலும் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளதால் ஆஸ்திரேலியாவில் 2020ம் ஆண்டிற்கான உலக கோப்பை போட்டி நடப்பது சந்தேகமே என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட கமிட்டி உறுப்பினர் அன்ஷூமான் கெய்க்வாட் தெரிவித்து உள்ளார்.
உலக கோப்பை போட்டியானது தள்ளி வைக்கப்பட்டாலோ அல்லது ரத்து செய்யப்பட்டால் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என அவர் தெரிவித்து உள்ளார். மேலும் அக்டோபர், நவம்பர் மாத காலகட்டத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கான சூழல்கள் உருவாகலாம் என தெரிவித்தார். அப்பொழுது இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரத்தைப் பொறுத்தே இது முடிவு செய்யப்படும் எனவும், இப்போதைக்கு ஐபிஎல் பற்றி சிந்திக்கவில்லை என கெய்க்வாட் தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |