கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை இடையேயான ஐ.பி.எல் போட்டியை உலகளவில் உள்ள பல ரசிகர்கள் கண்டுகளித்தனர். இந்த போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை விவரம் அனைவரையும் வாய் அடைக்க வைத்துள்ளது.
ஐ.பி.எல் போட்டிகள்:
இந்தியாவில் கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்து பலரும் பாதிக்கப்பட்டு வந்தனர். குறிப்பாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் மக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் நன்றாக இருந்த இந்த பொது முடக்கம் நாளாக நாளாக அனைவருக்கும் சலிப்பு ஏற்பட்டது. எப்போதும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகள் கொரோனா பரவல் அச்சம் காரணமாக நடைபெறாமல் இருந்தது கிரிக்கெட் ரசிகர்களை மேலும் சலிப்படைய வைத்தது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
ஆனால், ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று கிரிக்கெட் அமைப்பான பி.சி.சி.ஐ தீவிரமாக இருந்து வந்தது. அதனால் போட்டிகளை கொரோனா பரவல் அதிகம் இல்லாத நாடான ஐக்கிய அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அங்கு உள்ள துபாய், ஷார்ஜா மற்றும் அபு தாபியில் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் முதல் ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
“தரமான முதல் போட்டி”
முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இடையே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த இரு அணிகளுமே ஐ.பி.எல் தொடரில் அதிகமாக பேசப்பட்ட அணிகள். போட்டி நடக்கும் முன்பு இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதீதமான எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த போட்டியினை நேரில் காண அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும் நவீனமயமாகும் மின் கட்டணம் – வீட்டு வாசலிலேயே கட்டலாம்!!
அதனால் அனைவரும் தொலைக்காட்சி மற்றும் தங்களது ஸ்மார்ட் போன் மூலமாக தன கண்டுகளித்தனர். தற்போது இந்த போட்டியினை கண்டவர்களின் எண்ணிக்கை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை 20 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். இது ஐ.பி.எல் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் சாதனையாக கருதப்படுகிறது. ஒரு விளையாட்டு போட்டியினை இந்தனை கோடி பேர் பார்த்தது இதுவே முதல் முறை. உலகளவில் நடைபெறும் லீக் போட்டிகளிலும் சாதனை படைத்துள்ளது.