ஐபிஎல்லில் தோனி கேப்டன்சிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இவர் தான் வழி நடத்துவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.
CSK புதிய கேப்டன்:
அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஐபிஎல் 16 வது சீசனுக்கான எதிர்பார்ப்பு இப்போதிருந்தே ரசிகர்கள் மத்தியில் எழ தொடங்கி விட்டது. இதற்கு மினி ஏலம் விரைவில் வர இருப்பது ஒரு காரணமாக இருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸின் தல தோனி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருப்பதை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும், வர இருக்கும் இந்த ஐபிஎல் சீசனுடன் தோனி ஓய்வு எடுக்க கூடும் என்பதால், அவரது இறுதிப் போட்டியை பார்க்க எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. ஒருவேளை இவர், அணியில் இருந்து விலகி விட்டால், CSK அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விகளும் தற்போது இருந்தே வர தொடங்கி உள்ளன. கடந்த முறையை CSK வுக்கு ஜடேஜாவை கேப்டனாக மாற்றி என்ன நடந்தது என்று நமக்கு தெரியும்.
முக்கிய வீரரை கழட்டி விட முயற்சிக்கும் பிசிசிஐ…, அப்படி என்ன தான் செஞ்சாரு??
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் CSK அணி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், தற்போது மகாராஷ்டிரா அணியை சிறப்பாக வழி நடத்தி, சதங்களை அடித்து வரும் ருதுராஜ் கெய்க்வாட் CSKவின் அடுத்த கேப்டனாக இருப்பார் என கூறியுள்ளார். மேலும், விக்கெட் கீப்பராக டெவோன் கான்வே இருக்க கூடும் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, இதற்காக அடுத்த சீசனில் தோனி இவர்களுக்கு பயிற்சி அளிப்பார் என வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.