இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக IPL போட்டிகள் இடையில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. அதாவது மீண்டும் சிஎஸ்கே அணியில் மகேந்திர சிங் தோனி மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பார் என்று தெரிவித்து உள்ளது.
மகேந்திர சிங் தோனி அவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். கிரிக்கெட் உலகில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் ரசிகர்களின் பேராதரவோடு இருப்பவர் நம்ம தல தோனி அவர்கள். இவர் கடந்த 2020 ஆம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு IPL போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடர்ந்து கேப்டனாக அவர் இருக்கிறார். மேலும் இவர் இந்த அணியின் கேப்டனாக 2008ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.
இதனிடையே, IPL போட்டிகளில் இடையில் சென்னை அணி தடைசெய்யப்பட்டபோது, தோனி அவர்கள் புனே அணிக்கு தலைமை ஏற்றார். இந்நிலையில் தற்போது சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அறிவிப்பு ஒன்றை தெரிவித்து உள்ளார். அதாவது, தோனி அவர்கள் எல்லா வித முழு தகுதியுடன் இருப்பதாகவும், அவரை அணியில் இருந்து விடுவிக்க காரணம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்து உள்ளார். மேலும் IPL போட்டிகளில், சென்னை அணியில் தோனி மேலும் 2 வருடங்களுக்கு தொடர்வார் என தெரிவித்து உள்ளார். இந்த தகவல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்