IPL 2022 – புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அகமதாபாத் அணியின் பெயர் இதுதான் – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வருடா வருடம் காத்திருக்கும் கிரிக்கெட் தொடர்களில் முதலிடம் பெறுவது ஐபிஎல். கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பாதி போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்து உள்ளதால் இந்த வருட ஐபிஎல் போட்டிகளுக்காக ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளனர்.

மேலும் இந்த ஆண்டில் இருந்து லக்னோ, அகமதாபாத் ஆகிய நகரங்களை மையமாக கொண்டு இரண்டு புதிய அணிகள் களமிறக்கப்படவுள்ளன. தற்போது அகமதாபாத் நகரை மையமாக வைத்து களமிறங்க உள்ள அணியின் பெயர் குஜராத் டைட்டன்ஸ் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அணியில் ஹர்திக் பாண்டியா, ரஷித் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஏற்கனவே லக்னோ நகரை மையமாக வைத்து விளையாடும் அணியின் பெயர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அணியில் கே.எல் ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here