இந்தியாவில் நடைபெற்று வரும், ஐபிஎல் தொடரில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற யாருக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறித்து புள்ளி விவரத்தை இப்பதிவில் காணலாம்.
ஐபிஎல்:
கடந்த மார்ச் மாத இறுதி முதல் இந்தியாவில் ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 10 அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டிகள் விளையாடி வருகின்றன. இதில், தற்போது வரை அனைத்து அணிகளும் 10 முதல் 11 வரையிலான லீக் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன் முடிவில், குஜராத் 16, CSK 13, லக்னோ 11 மற்றும் ராஜஸ்தான் 10 புள்ளிகளுடன் முதல் 4 இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் முன்னிலை பெற்றுள்ளது. இதே போல, தலா 10 புள்ளிகளுடன் KKR, RCB, PBKS மற்றும் MI ஆகிய அணிகளும், SRH மற்றும் DC அணிகள் தலா 8 புள்ளிகளுடனும் பிளே ஆப்புக்கு முன்னேறும் வாய்ப்பில் உள்ளன.
ஆனால், எந்தெந்த அணிகள் இந்த நடப்பு ஐபிஎல் தொடரில், அடுத்த பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை பெறும் என ஒரு புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. இதன்படி, GT – 99.7%, CSK – 82%, LSG – 45% மற்றும் RCB – 43% சதவீதத்துடன் அதிகபட்ச வாய்ப்பை பெற்றுள்ளது. இதற்கு அடுத்ததாக, MI – 42%, RR – 26%, KKR – 24%, PBKS – 15%, SRH – 13% மற்றும் DC – 11% பிளே ஆப் முன்னேறுவதற்கான சதவீதத்தை பெற்றுள்ளனர்.